சென்னை:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 நாட்கள் வேலை என்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்ட குறிப்பிட்ட சில முக்கியமான பணியாளர்கள்  கொண்டு இயக்கப்பட்டு வந்தது. தற்போது ஊரட்ங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இனிமேல் வாரத்தில் 6 நாட்களுக்கு பணிக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து  தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால், ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் 6 நாட்கள் கண்டிப்பாக பணியாற் றவேண்டும் என்று அனைத்து அலுவலகங்களுக்கும் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா  சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மேலும், அனைத்து ஊழியர்களும்  இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும் என்றும் அரசு பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும், சனிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.