கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி தீயாக பரவுவது வழக்கமாகிவிட்டது. தற்போது சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது, விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.

என் திருமணம் குறித்த வதந்திகளால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. இந்த வதந்திகள் எல்லாம் எங்கிருந்து தான் கிளம்புகிறது என்று வியக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால் இந்த உலகிற்கு முதலில் அறிவிப்பது நானாகத் தான் இருக்கும்.

என் திருமணம் குறித்து ஏதாவது யூகிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போது நான் என் கெரியரில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.