மதுரை:
ந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே, உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில்வே வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.
இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவில்லை என்றால் நேரடி போராட்டத்தில் இறங்க உள்ளோம் என்று  குறிப்பிட்டுள்ளார்.