ஆனால், காலை செயற்குழு கூட்டம் தொடங்கும் முன்னரே, அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், ஓபிஎஸ் தரப்பினர், முகமூடி அணிந்து வந்தும் கோஷங்களை எழுப்பியும் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்த அதே வேளையில், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் நிரந்தர முதல்வர் என பலத்த கோஷங்களை எழுப்பி ஈபிஎஸ்க்கு ஆதரவு அளித்தனர். இவ்வாறாக அதிமுகவினர் இருபிரிவினராக இருந்து கோஷங்களை எழுப்பி வந்ததால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்றைய செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்ர், முதல்வர் வேட்பாளர் குறித்து காரமான விவாதங்கள் நடைபெற்றன. முதல்வர் வேட்பாளர் குறித்து இன்றே முடிவெடுக்க செயற்குழுவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவாதங்களின் போது, இரு தரப்பினரும், தங்கள் தரப்பினரையே முன்னிலைப்படுத்துவதால், தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. சுமார் 5 மணி நேரம் கூட்டம் நடைபெற்றும், எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.