சென்னை:

ள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுத்  தீர்ப்பை வரவேற்கிறேன் என்று கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த  தீர்ப்பு தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, மீண்டும் தேர்தலை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  “உள்ளாட்சித் தேர்தலையொட்டி, இன்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜனநாய கத்தை காக்கும் வகையில், அந்த தீர்ப்பு அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது. தி.மு.க சார்பில் அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாடவில்லை என்று கூறியவர், ஊடகங்களும், அதிமுகவினரும் மாறி மாறி இதையே தெரிவித்து வருகின்றனர் என்றும், ஆனால், திமுக, தமிழகஅரசு  தொகுதி மறுவரையறை சரியாக இல்லை. இட ஒதுக்கீடு முறையாக இல்லை என்பது குறித்தே கடந்த  2016ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறது. அப்போதே நாங்கள் இதுகுறித்து நீதிமன்றத்திற்கு சென்றோம். அதற்கான தீர்ப்பும் இன்று கிடைத்துள்ளது என்று கூறினார்.

மேலும், தற்போதைய வழக்கில்,  தி.மு.க எடுத்து வைத்த கோரிக்கையின் நியாயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். மறுவரையறை முடியாமல் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது ஏன் என்றும், சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காதது ஏன் என்றும்  கேள்வி எழுப்பியதுடன் இன்று தீர்ப்பும் வழங்கி உள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிம் முறையான உள்ளாட்சி அமைப்பை அமைக்க தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலின், தி.மு.க தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.