சென்னை:

ண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான், தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என்று கவிஞர் வைரமுத்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப் பட்டுள்ளது.  புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும்.எந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்க போவது இல்லை, அயல்நாட்டு மொழிகளையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம். மூன்றாவது மொழி என்ன என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்.5 -ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியில் கற்பிக்கும் முறை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது  தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மத்தியஅரசின் மும்மொழி கொள்கை குறித்து, கவிஞர்  வைரமுத்து தனது டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

அதில்,  அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.