சென்னை:
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மத்திய கல்வி அமைச்சகத்துடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இன்று கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம். புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் தெரிவித்தோம். மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் நீட் தேர்வு நடத்த தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லூரிகளுக்கு, இந்திய அளவிலான ஒதுக்கீடு போன்ற குறிப்பிட்ட செயல்களுக்கு மட்டும் நீட் தேர்வை வைத்துக்கொள்ளுங்கள், தமிழக மாநில கல்லூரிகளில் நீட் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டோம் என்றார்.