செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கர்ஜனை’

நீண்ட நாட்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகியும், ஒருசில காரணங்களால் வெளியிட்டு தேதி தள்ளி போய்க்கொண்டிருந்தது.

இந்த நிலையில் அடுத்த மாதம் ‘கர்ஜனை’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் ‘கர்ஜனை’ இயக்குநர் சுரேந்தர் பாபு குறிப்பிடுகையில், “கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பித்து 27 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.2018ஆம் ஆண்டிலேயே இதன் தொழில்நுட்ப பணிகளும் முடிந்துவிட்டது.

இந்த படத்தின் வெளியிடு தாமதமானது வருத்தமடைய செய்தாலும், தற்போது ஒரு பெரிய நிறுவனம் இந்த படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியே என தெரிவித்துள்ளார் .மேலும் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் எனவும் தெரிவித்துள்ளார்

ஆக்ஷன், த்ரில்லர் படமான இதில் திரிஷா, வம்சி கிருஷ்ணா, மதுமிதா, ஸ்ரீரஞ்சனி, வடிவுக்கரசி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.