சென்னை:

எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என சடகோப ராமானுஜ ஜீயர் பேசி இருக்கிறார்.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் போராட்டம் அறிவித்தார். 16ம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு என்று அவர் விதித்த காலக்கெடு முடிந்ததை தொடர்ந்து 17ம் தேதி தனது உண்ணாவிரத்தை தொடங்கி மறுநாளே விரதத்தை கைவிட்டார்.

இந்நிலையில் தற்போது வைரமுத்து குறித்து அவர் பேசி இருக்கிறார். அதில்ல ‘‘எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும். நாங்களும் கல் எறியக்கூடியவர்கள் தான். ஆனாலும் நாங்கள் அப்படி நடக்க மாட்டோம்.

பிப்ரவரி 3ம் தேதிக்குள் வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் இனி அமைதியாக போகமாட்டோம்’’ என்றும் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.