டிவி சீரியலில் நாளை என்ன நடக்கும் என்ற பரபரப்பு சஸ்பென் ஸுடன் முடிக்கப்படுகிறது. மறுநாள் டிவியில் பார்ப்பதை முதல்நாளே பார்க்கும் வசதியை ஜீ5 கிளப் தளம் ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் இதுபற்றி ரசிகர்களுடன் ஸூம் வீடியோ மூலமாக நேரலையில் டிவி நடிகர், நடிகைகல் விஷ்ணு விஜய், ஆயிஷா, ஸ்ரீகுமார் மற்றும் நக்‌ஷத்ரா ஆகியோர், ஜீ5ன் இந்த முடிவுவை பாராட்டி உள்ளனர்.


ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர் சத்யா. இதில், ஆயிஷாவுடன் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் விஷ்ணு விஜய் கூறியது: இதுவொரு அற்புதமான முடிவு. எனக்கு ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பல ரசிகர் களுக்கு உண்டு. அப்படிப்பட்டவர் களுக்கு, ஒரு நாள் முன்னரே அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஜீ5 க்ளப் தரும். கண்டிப்பாக ஜீ5 கிளப்பை பலர் தேர்வு செய்வார்கள் என்று உறுதியுடன் கூறுகிறேன்.
நடிகை ஆயிஷா கூறியது: ஜீ 5ன் இந்த முடிவு, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சாதகமான ஒரு சூழலை உருவாக்கும். சந்தாதாரர்கள், அவர்களுக் குப் பிடித்த மான தொடர்களின் கதையோட்டம் குறித்து, தொலைக்காட்சியில் வருவதற்கு ஒரு நாள் முன்னரே தெரிந்து கொள்ள லாம்.
பிரபல தொடர் ’யாரடி நீ மோகினி’யில் நடிக்கும் நடிகர்கள் ஸ்ரீகுமாரும், நக்‌ஷத்ராவும் இதுபற்றி தெரிவித்தனர்.
ஸ்ரீகுமார் கூறியது: ஜீ5-ன் அற்புதமான முடிவு இது. இந்த சந்தாவுக்கான கட்டணம் தான் என்னை அதிகம் ஈர்த்துள்ளது. ஒரு வருட சந்தா வெறும் ரூ.365 மட்டுமே. அதாவது ஒரு நாளைக்கு வெறும் ஒரு ரூபாய் என்கிற கணக்கு. அதன் மூலம் அத்தனை தொடர் களையும், நிகழ்ச்சிகளையும் ஒரு நாள் முன்னரே பார்க்க முடியும்.
நக்‌ஷத்ரா குறியது: ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை ஒரு நாள் முன்னரே பார்க்கும் வாய்ப்பைத் தரும் இந்த ஜீ5 கிளப் மிகவும் புதுமை யான முடிவு. கண்டிப்பாக இதைப் பலர் வரவேற்பார்கள்.