பாகுபலி – 2 திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ் நடித்துள்ளதால், அப்படம் வெளியாகும் ஏப்ரல் 28-ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என  கன்னட சளுவாலி அமைப்பு தலைவர் வாட்டாள் கூறியுள்ளார்.

பாகுபலி -2 திரைப்படத்தில் கட்டப்பா என்ற முக்கிய கதாபாத்திரத்தில்  சத்யராஜ் நடித்திருக்கிறார்.

காவிரி போராட்டத்தின்போது, நடிகர் சத்யராஜ்  கன்னடர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்டால்தான் பாகுபலி படம் திரையிட முடியும் என்றும்  வாட்டாள் நாகராஜ் மிரட்டியுள்ளார்.

திரைப்படம் வெளியாகும் ஏப்ரல் 28-ம் தேதி கர்நாடகாவில் முழுஅடைப்பு போராட்டமும், பாகுபலி -2 திரையிடப்படும் திரையங்குகளின் முன் ஆர்ப்பாட்டங்களும் நடத்த  வாட்டாள் நாகராஜ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.