சென்னை:  திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.  திடீர் திருப்பதாக அவரது மரணம் தொடர்பாக 5 பேரில் காவல்துறை கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. அவரது தம்பி மகனே இந்த கொலைக்கு காரணமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான் உடல்நலக் குறைவால்  டிசம்பர் 22ந்தேதி அன்று  காலமானார்.   மறைந்த மஸ்தான் 1995 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.  பின்னர்   கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு திமுகவில் சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவராக இருந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று அவர் காலை காரில் ஊரப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது.  திடீர் மாரடைப்பு காரணமாக அவர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக  கூறப்பட்டது.

இந்த நிலையில், மஸ்தான் மறைவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  அவரது மரணம் குறித்து சிலர் சந்தேகம் எழுப்பிய நிலையில்,  மஸ்தான் உயிரிழந்தில் சந்தேகம் இருப்பதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த சந்தேகத்திற்கு அடிப்படையில் புகாரைப் பெற்றுக் கொண்டு கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  அ  அவர் உயிரிழந்தபோது, அவருடன் இருந்தவர்கள் உள்பட   5 பேரை பிடித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மஸ்தான் கொலை செய்யப்பட்டிருக்கம் என சந்தேகிக்கப்படுகிறது.

மஸ்தான் ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வந்தால், அவர் தொழில்போட்டிகளால் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

விசாரணையில், மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. இதற்கு திட்டம் திட்டியவர்மஸ்தான் தம்பியின் மருமகன் இம்ரான்  என்றும், அதன்படி,  மஸ்தானை கொலை செய்ய, இம்ரான் ரூ.15 லட்சம் பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து இன்னும் உறுதியான தகவல்களை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.