சென்னை: தமிழகத்தில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் இசைக்கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மானிய கோரிக்கையின் போது இந்து அறநிலைத்துறை அமைச்சர், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருக்கோவில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் போன்ற இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத் தொகையை மும்மடங்கு உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை தமிழகஅரசு உறுதி செய்துள்ளது. அதன்படி,
நாதஸ்வர கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.1500-லிருந்து ரூ.4500 ஆகவும்,
தவில் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.1000 லிருந்து ரு.3000 ஆகவும்,
தாளம் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.750 லிருந்து ரூ.2250 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.