முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நான்காவது சீசனில் கலந்துகொண்ட அவர் அன்பு ஜெயிக்கும் என்று கூறி கொண்டே இருந்ததால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

யூடியூப், இன்ஸ்டாகிராமிலும் தனது மகளுடன் சேர்த்து வீடியோ ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் ஷேர் செய்த பாத்ரூம் டூர் வீடியோ பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அர்ச்சனாவுக்கு திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரே செய்தி வெளியிட்டிருந்தார்.

மிகவும் சிக்கலான ஆபரேஷனுக்கு பின்னர் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருந்து வந்த அர்ச்சனா தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியிருக்கிறார். மருத்துவமனையில் இருந்து வீல் சேரில் வீடு திரும்பியிருக்கிறார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் அர்ச்சனா. தனது வழக்கமான கணீர் குரலுக்கு பதிலாக மெல்லிய குரலில் மிகவும் கஷ்டப்பட்டு அவர் பேசியிருக்கிறார். தான் அனுபவித்த வேதனைகளை அவர் எடுத்துரைத்திருக்கிறார்.