கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அர்ச்சனா, ஆபரேஷனுக்குப் பின் முதன் முதலாக தனது யூ-ட்யூப் சேனலில் லைவில் பேசினார்.

அதில் “மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எப்போ வருவீங்க என்று பலரும் கேட்டு வந்தார்கள். அதற்கு பதிலளித்த அர்ச்சனா இப்போ கூட நான் வர தயாராக இருக்கிறேன். ஆனால் எனது வலது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. தொடையில் உள்ள தசையை வெட்டி சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய மூக்கு பகுதியில் ஒட்டி உள்ளனர்.

படப்பிடிப்புக்கு வந்தால் தொடர்ந்து 15 – 16 மணிநேரம் செட்டில் நிற்க வேண்டும், ஆனால் தற்போது காலில் வலி இருப்பதால் என்னால் தொடர்ந்து நிற்க முடியாது. மீண்டும் பழைய நிலைக்கு நான் திரும்ப இன்னும் சில மாதம் ஆகும் என்று நினைக்கிறேன். செப்டம்பர் 3-ம் தேதி மருத்துவமனையில் ஒரு பரிசோதனை இருக்கிறது. அந்த பரிசோதனைக்கு பிறகே அனைத்தும் தெரியவரும்” என்று கூறினார்.

https://youtu.be/l37aa1qUE4c