டில்லி

ன்று நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலையொட்டி பார்வையாளர் அனுமதிச் சீட்டு வழங்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அவர்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசி அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது.

உடனடியாக அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இதே பாணியில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை விசாரணையில், மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து, அச்சுறுத்திய இருவரின் அடையாளம் தெரிந்ததாகவும் அவர்கள் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன், சாகர் சர்மா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருவரும்  கர்நாடக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். வழங்கிய அனுமதி சீட்டில் இருவரும் உள்ளே நுழைந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த நீலம் (வயது 42), மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் பகுதியைச் சேர்ந்த அமோல் ஷிண்டே (வயது 25) என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதிச் சீட்டு  வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்தில் கூடுதலாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது. சோதனையின்போது பயப்படும்படியாக, ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையிலோ எந்த பொருளும் காணப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.