சண்டிகர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரணம்  அடைந்துள்ளார்.

தற்போது 84 வயதாகும் ராம் பிரகாஷ்  அரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார். கடந்த 2007 முதல் 2014 வரை இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை  உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.

ராம் பிரகாஷ் உடல்நலக்குறைவு காரணமாக குருஷேத்ரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ராம் பிரகாஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.