மும்பை

மும்பையில் உள்ள லோகமான்ய திலக் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் லோகமான்ய திலக் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலைய எப்போதும் பிசியாக இருக்கும்  இன்று பிற்பகல் இந்த ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் நிலயத்தின் முதலாவது நடைமேடையின் ஒரு பகுதியில் பற்றிய தீ மளமளவெனப் பரவியது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.எனவே  அங்கு நின்றிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.

ரயில்வே நிர்வாகம் முதலாவது நடைமேடையில் இருந்த சிற்றுண்டிச்சாலையில் தீப்பிடித்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.