‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ தொடர்ந்து விஷ்ணு விஷால் , இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில், எப்.ஐ.ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. டைட்டிலுக்கு கீழே பைசல், இப்ராஹிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு, மேலும் “ஐ.எஸ்.அமைப்பை சேர்ந்த சென்னை வாலிபர்கள் கைது” போன்ற செய்திகள் அச்சிடப்பட்ட சில வரிகளும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

மேலும் விஷ்ணு விஷால் முகத்தில், கண் மட்டும் தெரியும்படி, துணியால் முகத்தை மூடியுள்ளார். இந்த படத்தின் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

சுஜாதா என்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் ஆனந்த் சாய் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.