மும்பை:
ந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் விராட் கோலி. இதனால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.