திருப்பதி

ரும் ஜூன் 30 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி ஐ பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குற்ப்பாக விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.