டெல்லி

ச்சநீதிமன்றம் 48 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் வாக்க் சதவீதத்தை வெளியிட உத்தரவிட மறுத்துள்ளது.

தற்போது 7 கட்டங்களாக நடக்கும் மக்களவை தேர்தலில் இதுவர ஐந்து கட்ட தேர்தல் வா நடந்துள்ளன. நாளை ஆறாவது கட்ட வாக்குப்பதிவும்ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.  தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையிலும் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதத்தை தெரிவிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டது.

எனவே 48 மணி நேரத்திற்குள் பூத் வாரியாக அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  இன்று இந்த மனு உச்சநீதிமன்ற் விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்த்ரா சர்மா கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணைய தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்,

“இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு முறையும் இப்படியான சந்தேகங்களை தேர்தல் ஆணையத்தின் மீது எழுப்பும்போது, மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதைவதை பார்க்கிறோம். 

தற்போதைய மக்களவை தேர்தலில்கூட வாக்கு சதவீதம் குறைவதற்கு இந்த மாதிரியான மனுக்கள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன.

இந்த மாதிரியான மனுக்கள் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் மக்கள் வாக்குசாவடிகளுக்கு வருவதற்கு தயங்குகிறார்கள்.”

என்றார்.

நீதிபதிகள்,

“ஏற்கனவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், நாங்கள் அதில் தலையிட முடியாது. முக்கியமான ரிட் மனுவுடன் இந்த மனு சேர்ந்து விசாரிக்கப்படும். தற்போது தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும்போது நீதித்துறை அதில் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தால் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் செயல்முறையை பாதிக்கும். எனவே பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17சி படிவத்தை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது”

எனத் தெரிவித்துள்ளனர்.