சென்னை:
கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த சீராய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திருக்கோயிலில் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் . விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று கூறினார்.