தேமுதிக செயல் தலைவராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாதம் 24 ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

உடல்நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் விஜயகாந்த் இந்த கூட்டத்திற்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறப்படுகிறது.

2024 மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து அமைப்பு ரீதியாக தேமுதிக-வை பலப்படுத்த தேவையான முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.