சென்னை:  தண்டையார்பேட்டை மண்டலத்தில் நாளை நடைபெற இருந்த ‘மக்களை தேடி மேயர்’ சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், ‘மக்களைத் தேடி மேயர்’திட்டம் கடந்த மே மாதம்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை (ஜூலை 22) தண்டையார்பேட்டையில் உள்ள  மண்டல அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை, அம்மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த மக்களை தேடி மேயர் திட்ட முகாம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த ‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தசிறப்பு முகாம் நடைபெறும் நாள்மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.