சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான சோதனைக்கு மருத்துவமனைக்குச் சென்றதாக தேமுதிக அறிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

அவர் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

இதையொட்டி தேமுதிக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

கழக தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம்.

அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கொரொனா அறிகுறி தென்பட்டது.

இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது.

தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு

என தெரிவிக்கப்பட்டுள்ளது.