ன்னியாகுமரி

மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என விஜய் வசந்த் கூறியுள்ளார்.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தற்போது தமிழகம் முழுவதும் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்

விஜய் வசந்த் செய்தியாளர்களிடம்,

”காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் திரும்பப்பெறுவதற்கான முயற்சி எடுக்கப்படும், , காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எழுச்சிமிக்க மக்களாட்சியைக் கொண்டு வருவோம்” 

என்று தெரிவித்துள்ளார்.