கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் 129 பேர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்குகிறது விஜய் மக்கள் இயக்கம்.

நடிகர் விஜய் தனது புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி இருப்பதாக அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர், விஜயின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளிடையே என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பிப்ரவரி 22 அன்று தெரியவரும்.