விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி தங்கள் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ம் தேதி ஊரறிய திருமணம் செய்து கொண்டு அக்டோபர் 9 ல் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார் நயன்தாரா.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கூறப்பட்டதை அடுத்து இருவர் மீதும் விசாரணை துவங்கியது.

இதன் பின் சத்தமில்லாமல் இருந்த இருவரும் தற்போது தங்கள் 15 நாள் குழந்தையுடன் முத்தமிடும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் இவர்களின் புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருவதுடன் இது இவர்களுக்கு தல தீபாவளியா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்புகின்றனர்.