‘கொலையுதிர் காலம்’. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் பேசியது திரையுலகின் அனைத்து தரப்பினரையும் சங்கடத்துக்குள்ளாக்கியது.

இதனால் ராதாரவியை கட்சியிலிருந்தும் தற்காலிகமாக ஸ்டாலின் நீக்கினார்.

இந்த நிலையில், கொலையுதிர் காலம் படம் குறித்து இயக்குனரும் நயனின் காதலருமான விக்னேஷ் சிவன், படம் முழுமையாக முடியவில்லை, என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

படம் முடிவடைந்த நிலையில், விக்னேஷ் சிவன், படம் முடிவடையவில்லை, என்று கூறியிருப்பது படத்தின் வியாபாரத்திற்கு பின்னடைவை தரும் என்பதால், தவறான தகவல் வெளியிட்ட விகெனேஷ் சிவன், மீது தயாரிப்பு தரப்பு வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.