‘உறுமீன்’ படத்தை தொடர்ந்து தற்போது விதார்த் நடிக்கவுள்ள புதிய படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கவுள்ளார் சக்திவேல்.

இப்படத்தை ‘கொரில்லா’, ‘பார்டர்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டி. விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். இப்படத்தில் விதார்த்துடன் கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஒரு படம்.