சென்னை

சென்னை மதுரை விமானத்தில் ஒரு விமானி தமிழில் காவிரி, கொள்ளிடம், ரங்கநாதர் குறித்து தமிழில் அறிவிப்பு அளித்துள்ளார்.

விமானங்களில் பொதுவாக ஆங்கிலத்தில் அறிவிப்பு அளிக்கப்படுவது வழக்கமாகும்.

ஒரு சில விமானங்களில் இந்தியில் அறிவிப்பு அளிப்பார்கள்.

அதுவும் தமிழகத்தில் பயணிக்கும் விமானங்களிலும் இந்தி அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்ற ஒரு விமானத்தில் தமிழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அறிவிப்பை அளித்த விமானி பிரிய விக்னேஷ் காவிரி, கொள்ளிடம், ரங்கநாத சாமி கோவில், ஸ்ரீரங்கம் என விளக்கி உள்ளார்.

இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரிய விக்னேஷ் அறிவிப்பு வீடியோ பதிவாகப் பதியப்பட்டு சமூக வலைதளஙக்ளில் வைரலாகி வருகிறது

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோ இதோ

[youtube https://www.youtube.com/watch?v=RjvOAX4BzCU]