டெல்லி: எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்  எழுதிய ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைக்காக  இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் அம்பையின் இயற்பெயர்  சிஎஸ் லட்சுமி. தமிழ்நாட்டின் குறிப்பாக தமிழின்  சிறந்த பெண் படைப்பாளிகளில் இவரும் ஒருவர்.   1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர் ஏராளமான கதை கட்டுகளை எழுதி உள்ளார்.  ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி என்று அழைக்கப்படும் எழுத்தாளர் அம்பை,  பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விசயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். அவர் எழுதிய சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.