சென்னை

மக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகத் தமிழக ஆளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.  செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கிய உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்.வெங்கடேசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

“ஆளுநரின் செய்திக்குறிப்பு நிறுத்தி வைப்பு…

ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே. இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள். தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள்”

என்று தெரிவித்துள்ளார்.