சிவகங்கை: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திரண்டதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 415 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிவகங்கையில் வேலுநாச்சியாரின் 292-வது பிறந்த நாள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில்  கலந்து கொண்ட  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பா.ஜனதா மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி மற்றும் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நடிகை காயத்ரி ரகுராம் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காவல்துறையின் தடையை மீறி, அங்குள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்ததுடன், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றனர். இதையடுத்து, அண்ணாமலை உட்பட 415 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.