a
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு வரும் 16ம் தேதி நடக்க இருக்கிறது. இதையடுத்து பல்வேறு ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.ட
இது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது. வரும் மே.14 ம் தேதி மாலையிலிருந்து கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சிகளில் மட்டுமின்றி வாட்ஸ்அப் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களிலும் கருத்துக்கணிப்புகளை வெளியிடவோ, பார்வர்ட் செய்யவோ கூடாது. அப்படி செய்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.