a
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி பாமக வேட்பாளரி  திருப்பதி அ.தி.மு.கவில் இணைந்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் பாமக வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தவர் திருப்பதி. இவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது வழிமொழிவதற்குகூட நபர்கள்  இல்லை (10 பேர் வழிமொழிய வேண்டும் என்பது விதி). ஆகவே,  தான் வந்த காரின் ஓட்டுநர் மற்றும் தனது அம்மாவை வழிமொழிய வைத்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது திருப்பதியின் மொபைல் போனும் அடிக்கடி ரிப்பேர் ஆனது. ஆகவே  டிரைவரின் போனை வாங்கி பேசி உள்ளார். அந்த போனில் இருந்த டிரைவரின் மனைவியின் மொபைல் நம்பரை எடுத்த  திருப்பதி, டிரைவரின் மனைவிக்கு அடிக்கடி போன் செய்து பாலியல் ரீதியாக மோசமாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் டிரைவரின் மனைவி புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நைனார் நாகேந்திரன் முன்னிலையில் திருப்பதி, அதிமுக.,வில் இணைவதாக அறிவித்து இருக்கிறார்.
தான் போட்டியில் இருந்து விலகுவதாகவும் திருப்பதி அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாமக வேட்பாளர் கட்சி மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது