சென்னை:

ஆண்டாள் பிரச்னை நாளுக்கு நாள் விஸ்ரூபம் எடுத்து வரும் நிலையில் வைரமுத்து உதயநிதி படத்துக்கு ஒரு பாடலை எழுதி வெளியிட்டுள்ளார்.

 

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் கண்ணே கலைமானே. இந்தப் படத்தினை இயக்குநர் சீனுராமசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கான பாடல் ஒன்றை கவிஞர் வைரமுத்து எழுதி முடித்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும்,‘‘முதல் பாடல் பிறந்தது. யுவன் சங்கர் ராஜா -வைரமுத்து கூட்டணி 3வது முறையாக உங்கள் வாழ்த்துகளுடன் இணைகிறது” என்று அதில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து தெரிவித்த கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் சமயத்தில் ஒரு பாடலை வைரமுத்து எழுதி முடித்துள்ளார்.