சென்னை: மதிமுக தலைமைக் கழக செயலாளராக, வைகோவின் மகன் துரை வையாபுரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது/   சமீபத்தில் 3 மாவட்டச் செயலாளர் மதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன், மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என குரல் எழுப்பினர். இந்த சூழலில் இன்று மதிமுக பொதுக்குழு கூடியது. இதில் அதிருப்தி மாவட்டச் செயலாளர்கள் 3 பேரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த நிலையில், பொதுகுழு கூடியது. இதில், வைகோ மகன் துரைவைகோவும் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் , உட்கட்சி பிரச்சினைகளுக்கு பொதுக்குழு கூட்டத்தில் தீர்வு காணுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு முழு அதிகாரம் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து,  மதிமுக தலைமைக் கழக செயலாளராக, வைகோவின் மகன் துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்துதெரிவித்தனர்.