விடுதலை புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணைக்காக 2வது நாளாக சங்கீதா பின்ரோ தலைமையிலான குழு முன்பு வைகோ மீண்டும் ஆஜராகியுள்ளார்.

விடுதலை புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணை, மதுரை பயணியர் விடுதியில் விசாரணை ஆணையர் சங்கீதா பின்ரோ தலைமையிலான குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நேற்று முதல் நாளாக விசாரணைக்காக ஆஜரானார்.

இந்நிலையில் 2வது நாளாக இன்றும் ஆஜராகியுள்ள வைகோ, விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதோடு, தடையை நீக்க கோரி தனது தரப்பிலான வாதங்களையும் ஆணையத்தின் முன்பு வைத்து வருகிறார்.