மதுரை:
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் இன்று முதல் தினசரி வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், இதனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பகுதிகளில் உள்ள 2284.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.