தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ஐந்து வருடங்களுக்கு மேலாக அவர் சரியாக சினிமாவில் நடிக்கவில்லை.

இந்நிலையில் இயக்குநர் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம் வடிவேலு. ‘தலைநகரம்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரான ‘நாய் சேகர்’ என்பதையே இப்படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.