சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

அதன்படி,  இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்கள், கூட்டுறவுத்துறையில் உதவி தணிக்கை இயக்குநர் என மொத்தம் 8 பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை 1 இல் 4 பணியிடங்களுக்கு, இந்துக்கள் மட்டும் பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 23, 24 தேதிகளில் தேர்வு நடைபெறும்.

கூட்டுறவுத்துறை தணிக்கைப்பிரிவில் 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கும் பிப்ரவரி 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வுத் தாளும் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணி தொடர்பாக வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தங்களுக்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு: www.tnpsc.gov.in இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.