வாராகி அம்மன்

எதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள். பயத்தினை போக்குபவள். வெற்றியைத் தருபவள். எல்லா நலன்களையும் தருபவள்.

சோழனின் வெற்றி தெய்வம் இவளே. இவளை வழிபட்டே ராசராசன் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டான். ராசராசனுக்கு தோல்வியில்லா  நிலையைத் தந்தவளும் இவளே.

நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப விவசாயத்தின் தெய்வம் இவளே. கலப்பை இவளது ஆயுதம். பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்கா தலத்தின் நாயகி அகிலாண்டேஸ்வரி வாராகியின் வடிவமே. ராசராச சோழன் இவளை வழிபட்டே எக்காரியத்தையும் தொடங்குவான் என்று வரலாறு தெரிவிக்கிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பிருந்தே வாராகி வழிபாடு செய்திருக்கிறான் ராசராச சோழன்.

இன்றும் தஞ்சை பெரிய கோவிலில் ஒரு வழக்கம் உண்டு. பொதுவாக எல்லா கோவில்களிலும் முதலில் விநாயகருக்குத் தான் வழிபாடுகள் நடக்கும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் முதலில் வாராகிக்குத் தான் பூசைகள் நடக்கும். சோழர்களின் குலதெய்வம் துர்க்கை. துர்க்கையின் தளபதி வாராகி ஆவாள்.

வாராகி_அம்மன் : பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராகம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.