நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி நிற்பதையும், தாமதமாவதால் எளிய மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள வாய்தா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே. வினோத்குமார் தயாரிக்க சி.எஸ். மகிவர்மன் இயக்கத்தில் கதை நாயகனாக மு.ராமசாமி நடித்திருக்கிறார்.
நாசர், புகழ் மகேந்திரன், பவுலின் ஜெசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் மே 6ம் தேதி வெளியாகிறது.