இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இதனை வி.கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தந்தை, மகன் என இருவேடங்களில் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை முடித்து விட்டு வாடி வாசல் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ’டைட்டில் லுக்’ போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்திருந்தார்.

வெகுநாட்களாக வாடிவாசல் படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியானது. கலைப்புலி.எஸ்.தாணு தனது ட்விட்டர் பக்கத்தில், நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் என பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.