சென்னை

மிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வெ பழனிக்குமார் ஐ ஏ எஸ் மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் அணையாராக வெ பழனிக்குமார் ஐ ஏ எஸ் பணி நியமனம் செய்யப்பட்டார்.  அவரது பதவி இரண்டாண்டுக் காலம் ஆகும்.  எனவே வரும் 28 ஆம் தேதியுடன் அவருடைய  பதவி முடிவு பெறுகிறது.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் வெ இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”இந்திய அரசியலமைப்பின் 243 கே என்னும் உறுப்பின் படியும் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 239ஆம் பிரிவின் உட்பிரிவு (2) இன் கூறு (பி) இன் படியும் திரு வெ பழனிக்குமார் ஐ ஏ எஸ் (ஓய்வு) அவர்கள் தொடர்ச்சியாக 09.03.2021 வரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாண்புமிகு ஆளுநர் அவர்களால் மறுபடியும் பணி நியமனம் செய்யப்படுகிறார்”

என அறிவிக்கப்பட்டுள்ளது.