வாஷிங்டன்

மெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. நேற்று மாலை 6.04 மணிக்கு விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரை இறக்கப்பட்டது.  இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுரியமாக நடத்தி முடித்தனர்.

விஞ்ஞானிகளின் அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. விஞ்ஞானிகள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை மேற்கொண்டனர். அவர்கள் முயற்சியால் லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது.

நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ், தனது சமூக வலைத்தள பதிவில்,

“சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்”

எனப் பதிவிட்டுள்ளார்.