பாகு

ன்று நடந்த உலகக் கோப்பை சென்ச் போட்டியின் இறுதிச் சுற்று டிராவில் முடிந்ததால் நாளை வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டம் நடைபெறுகிறது/

அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்ப ர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்-இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

மொத்தம் இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் ஆட்டத்தின் 35-வது நகர்த்தலுக்குப் பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது.  இன்று 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது.

முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இன்றைய ஆட்டம் 30 நகர்தல்களுக்குப் பிறகு டிராவில் முடிந்தது.

எனவே வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.