FIDE உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் மஃக்னஸ் கார்ல்சன் இடையிலான இரண்டாவது ஆட்டமும் டிரா ஆனது.

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 35 நகர்த்தலுக்கு பின் டிரா ஆனது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது ஆட்டம் துவங்கிய ஒரு மணி நேரத்துக்கு உள்ளாகவே இருவரும் தலா 30 நகர்த்தல்கள் செய்த நிலையில் டிரா செய்ய முடிவெடுத்தனர்.

இதனை அடுத்து நாளை டை பிரேக்கர் சுற்று நடைபெறுகிறது. இந்த சுற்றின் முடிவில் வெற்றி யாருக்கு என்பது உறுதிசெய்யப்படும்.